மது பாட்டில்கள் கடத்திய இரண்டு பெண்கள் திருவாரூரில் கைது

பேருந்தில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வருவதாக திருவாரூர் நகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருவாரூர் பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் வந்த அரசு பேருந்தில் பயணித்த நாகையை சேர்ந்த திவ்யா மற்றும் தியா இருவரின் பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 76 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. மது பாட்டில்கள் கடத்திய திவ்யா மற்றும் தியா இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி