விசாரணையில் காரைக்கால் விழுதியூர் பகுதியை சேர்ந்த மதியழகன் மற்றும் காரைக்கால் தல தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து, பேரளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன் மற்றும் பாலமுருகனை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயம் மற்றும் 250 மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தின் மதிப்பு சுமார் ரூ.38000 என கூறப்படுகிறது.