மாணவி விழுந்ததை கண்டு கொள்ளாமல் அரசு பேருந்து வேகமாக அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளது. இந்த நிலையில் மாணவியின் தலை மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மாணவி சுகந்தியை மீட்டு உடனடியாக நீடாமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் உயர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்கான காரணம் குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது மாணவி பேருந்தில் இருந்து தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.