ஸ்ரீசெம்பாயி அம்மன் ஸ்ரீமகாமாரியம்மன் புறப்படும் சித்திரை 15 ஆம் தேதி ஸ்ரீமகா மாரியம்மன் பூச்செறிதல் விழாவும் சக்தி கரகம் அதனைத் தொடர்ந்த இன்று காலை தீமிதிக்கும் பக்தர்களுக்கு கையில் காப்பு கட்டப்பட்டு மதியம் ஸ்ரீமகா மாரியம்மன் புறப்பட்டு சிமிழி கிராம வீதிகளை வலம் வந்து மேல தாளங்கள் முழங்க மாலை சரியாக 6 மணி அளவில் தீ குண்டத்தில் முதலில் சக்தி கரகம் இறங்கியவுடன் தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இவ்விழாவினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதன்பிறகு சக்தி கரகம் நடனத்துடன் வான வேடிக்கைகள் வெகு விமர்சையாக நடைபெற்று இரவு இன்னிசை கச்சேரியும் தொடர்ந்து நடைபெற்று நாளை மஞ்சள் நீர் விளையாட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழா தொடர்ந்து 22 நாட்களாக நடைபெற்று இன்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு