மத்திய அரசு லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தை 750 ரூபாயில் இருந்து 28 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் கடந்த இரண்டு தினங்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. இதன் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் எடுத்துச் செல்லும் பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மூன்றாவது நாளாக மன்னார்குடியில் லாரிகள் இயக்கப்படவில்லை.