இதன்படி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு திருவாரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற பணியில் இருந்து விலகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட தினத்தை நீதித்துறைக்கு ஏற்பட்ட கருப்பு தினமாக கடைப்பிடித்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர். தமிழக அரசு வழக்கறிஞர் சேமநல நிதி முத்திரைத்தாள் கட்டணத்தை ரூ. 30 இலிருந்து ரூ. 120ஆக உயர்த்தியதை திரும்பப்பெற கோரியும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ. 10,00,000/- இலிருந்து ரூ. 25,00,000/-ஆக உயர்த்தி வழங்க வேண்டும், புதிய வழக்கறிஞர்களின் சட்டதிருத்த மசோதாவை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி கோஷமிட்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.