மன்னையில் பாதாளசாக்கடை திட்டத்தை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மன்னார்குடி பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் முழுமை பெறாமல் தொடங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மன்னார்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பாதாள சாக்கடை திட்டம் நீர்நிலைகள் தூர்வாரும் போன்ற பல பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன் ஒரு அங்கமாக மன்னார்குடி ஜியர் தோப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளின் ஒரு பகுதியாக பம்பிங் அறை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மன்னார்குடி நகரமன்றத் தலைவர் மன்னை சோழராஜன் இன்று நேரில் ஆய்வு செய்தார். நகரமன்றத் துணைத் தலைவர் கைலாசம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி