இது குறித்து ஜாகிர் அகமது திட்டச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் வல்லம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (வயது 35). அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (வயது 24) ஆகிய இருவரையும் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர்.
விசாரணையில் இவர்கள் ஜாகிர் அகமது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 2500 பணத்தை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.