சீமானின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சீமானின் உருவ பொம்மையை எரித்து ஏராளமான திமுக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் காவல் துறையினர் தண்ணீரை ஊற்றி உருவ பொம்மையை அணைத்து திமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி