மன்னார்குடியில் வெண்ணைத்தாழி உற்சவம் கோலாகலம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி பங்குனி திருவிழா கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று (பிப்ரவரி 22)16வது நாளாக நடைபெற்ற வெண்ணைத்தாழி உற்சவத்தில் வெண்ணை தின்னும் கண்ணன் திருக்கோலத்தில் நவநீத அலங்காரத்தில் பள்ளத்தில் வீதி உலா வந்தார். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பக்தர்கள் சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபட்டனர். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி