இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவர் எஸ். அரவிந்தன், இந்தி எதிர்ப்பு வரலாறு என்பது கடந்த 1930 களிலேயே தொடங்கி விட்டது. 1937 ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ராஜாஜி சென்னை மாகாண பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
இந்த ஆணையை எதிர்த்து நீதி கட்சியினர் மற்றும் திராவிடர் கழகத்தினர் தந்தை பெரியார் தலைமையில் கடுமையாக எதிர்த்தனர். இதன் விளைவாக மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இதனால் தமிழகத்தில் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றன. மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் இந்தித் திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. மும்மொழிக் கொள்கையை திணித்தால் தமிழகம் திரண்டு எழும் என்றார். போராட்டத்தில் கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் பாஸ்கரன், பிச்சைக்கண்ணு, தர்மராஜ், தாஜூதீன் ஆகியோர் பங்கேற்றனர்.