மன்னையில் நடைபெற்ற ஆண்கள் பளு தூக்கும் போட்டி

திருவாரூர் மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்கம், எம். ஆர். டி மல்டி பவர் ஜிம் சார்பில் மன்னார்குடியில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் பிரிவுகளில் திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், மயிலாடுதுறை, சேலம் என 10 மாவட்டங்களைச் சேர்ந்த 150 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். 

55, 61, 67, 109 என பல்வேறு எடை பிரிவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் Snatch மற்றும் Clean Jerk சுற்றுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தொழிலதிபர் எஸ் எம் டி கருணாநிதி, திருவாரூர் மாவட்ட ஆணழகன் சங்க தலைவர் ஏ பி அசோகன் ஆகியோர் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். 

பளு தூக்கும் போட்டியில் மாநில அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை புதுக்கோட்டை மாவட்ட அணி வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது.

தொடர்புடைய செய்தி