நெடுவாக்கோட்டையில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்ட லாரிகள்

எம் சாண்ட், பி சாண்ட் ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டதை கண்டித்து நேற்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை கட்டுமான ஒப்பந்த தொழிலாளர்கள் மறைத்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்தனர். குறிப்பாக மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை, செருமங்கலம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது. கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி