5 முதல் 20 வயதுடைய 70 மாணவ மாணவிகள் பங்கேற்று கராத்தே பயிற்சிகளை செய்தனர். சென்சாய்கள் உள்ளிக்கோட்டை சேகர், மற்றும் குமரேசன் ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர். கராத்தே தேர்வில் பங்கேற்ற 70 மாணவர்களில் 67 பேர் தேர்ச்சி பெற்றனர். மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, பழுப்பு என 6 பட்டைகளுக்கான தகுதி தேர்வு நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னார்குடி சார்பு நீதிபதி எஸ். முத்துராமன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மஞ்சள் பச்சை, நீலம் என 6 வகையான பட்டைகளை வழங்கி பாராட்டினார். கராத்தே மாஸ்டர் கியோஷே ராஜகோபால் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சென்சாய்கள் சுதர்சன், ஆரத்தி, ராஜேஷ், காரிக்கோட்டை அசோக், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா