மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கொடியேற்றம்

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி திருவிழா 30 நாட்கள் விமர்சையாக நடைபெறும். 

அந்த வகையில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ராஜகோபால சுவாமி சந்நிதியில் உள்ள பெரிய கொடி மரத்தில் கருட சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராஜகோபால சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி