மன்னார்குடியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

மன்னார்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். 

திருவாரூர் மாவட்ட அமைச்சு ஆணழகன் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி மன்னார்குடியில் நடைபெற்றது. 16 வயது முதல் 40 வயதுடைய பங்கேற்பாளர்களுக்கு மினி சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் என பல்வேறு பிரிவுகளில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. பங்கேற்ற வீரர்கள் அனைவரும் நடுவர்களின் கட்டளைக்கு ஏற்ப தங்களது உடல் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். 

ஓவரால் சாம்பியன் பட்டத்தை வலங்கைமான் மாஸ்டர் ஜிம் வென்றார். இதேபோல் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை திருவாரூரைச் சேர்ந்த சஞ்சய், லெட்சுமாங்குடியைச் சேர்ந்த சபரிநாதன், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அபிலாஷ் ஆகியோர் மூன்றாம் பரிசை வென்றனர்.

தொடர்புடைய செய்தி