மன்னை சப்தாவரண விழாவில் திரளானோர் பங்கேற்பு

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். நேற்று 18வது நாளாக சப்தாவரண நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியறை முன்பு பாமாருக்மணியுடன் எழுந்தருளிய ராஜகோபாலசுவாமி புஷ்ப யாகம் கண்டருளினார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி