கடலூர்: கடைவீதியில் பிணமாக கிடந்த முதியவர்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் உள்ள வாசுகி கோவில் அருகில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து இது குறித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி