எண்ணூர் சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்த முருகன் (48 )பிரபாகரன் (28) தந்தை மகனான இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு குடிபோதையில் இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தந்தை முருகனை சுத்தியலை எடுத்து மகன் அடித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார் பிரபாகரனை கைது செய்துள்ளனர்.