தேர் திருவிழாவை முன்னிட்டு, வரும் நாட்களில் நாள்தோறும் மாலை வேளைகளில் திருஏடு வாசிப்பு நடைபெறும். பின்னர், ஒவ்வொரு நாள் இரவும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார். இவ்விழாவின் 8வது நாளான 11ம் தேதி இரவு 8 மணியளவில் சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, 8. 30 மணியளவில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணியளவில் பணிவிடை, உகப்படிப்பு, 6. 30 மணியளவில் திருத்தேர் அலங்காரம், 10. 30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதைத் தொடர்ந்து, காலை 11. 30 மணியளவில் அய்யா திருத்தேரில் வீதியுலா வருகிறார்
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்