திருத்தணி கோயிலில் திரண்ட பக்தர்கள் - போக்குவரத்து நெரிசல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினத்தில் இந்த திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அருகிலுள்ள ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டனர். இதனால் மலைக்கோவில் அடிவாரம் முதல் மலைக்கோவில் வரை கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைக்கோவில் அடிவாரத்தில் இப்போதைய பார்க்கிங் வசதி இல்லை. மலைக்கோவில் மேல்பகுதியிலும் போதிய பார்க்கிங் வசதி இல்லை. பார்க்கிங் வசதி விரிவுபடுத்த கோயில் நிர்வாகம் முன் வரவில்லை.

இதனால் வாகனம் எடுத்து வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு முன்னால் செல்லும் ஆட்டோக்கள் இதன் காரணமாக அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எதிர் திசையில் ஆட்டோக்கள் செல்வதால் இதனை கட்டுப்படுத்த போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவு ஏற்பட்டது. மலைக்கோவிலில் ரூபாய் 100 கட்டண வழி தரிசனம், மற்றும் பொது வழி தரிசனம் ஆகியவற்றில் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வரும் முருக பக்தர்களுக்கு உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு தீப ஆராதனையில் சிறப்பு அர்ச்சனையில் அருள் பாலித்தார்.

தொடர்புடைய செய்தி