திருவள்ளூர் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்ததும் 5 லட்சம் கோடி கடன் வாங்கி, மக்களிடம் வரி வசூலிக்கின்றனர். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து மீனவர்களுக்கு துரோகம் செய்தனர்.ஸ்டாலின் மன்னர் ஆட்சியை கொண்டு வர முயல்கிறார். மக்கள் திமுக மீது கோபத்தில் இருப்பதாகவும், வாக்குப்பதிவு இயந்திரம் உடையும் அளவுக்கு அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பேசினார்.