திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் அத்திமாஞ்சேரி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளத இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று காலை 11 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிட வசதிகள், மருந்துகள் பராமரிப்பு, மருத்துவக் கழிவுகள் கையாளும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது 2015 ஆம் ஆண்டு நோயாளிகள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை தற்போதைய வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியன் மருத்துவ பொருட்கள் சேகரிக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார் அதனை உடனடியாக நோயாளிகள் பயன்படுத்தும் கூடுதல் அறையாக மாற்றிட உத்தரவிட்டார்.
மகளிர் தின சிறப்பு: ‘வீட்டிலிருந்தே வருமானம் 2.O’ கருத்தரங்கு