இதில், பைக் நிலைதடுமாறி, கணவன் - மனைவி மற்றும் குழந்தை கீழே விழுந்து காயமடைந்தனர். அங்கிருந்த போக்குவரத்து போலீசார், மூவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், குழந்தை நிஷாந்த் உயிரிழந்தது தெரிய வந்தது. கணவன் - மனைவி பலத்த காயங்களுடன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, டிப்பர் லாரி ஓட்டுனரான, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஸ்ரீதர், (வயது 24) என்பவரிடம் விசாரிக்கின்றனர்.