சேவல் சண்டைக்கு தயாராகும் தங்கானூர் கிராமம்

தமிழ்நாட்டில் அழியும் நிலையில் உள்ள சண்டை சேவல் இனத்தை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளூர் மாவட்டம் தங்கானூர் கிராமத்தில் நீதிமன்ற அனுமதியுடன் சேவல் சண்டை போட்டி நடைபெறுகிறது. 

அந்த வகையில் ஐந்தாவது ஆண்டு சேவல் சண்டை போட்டி முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 1, 2, 3 ஆகிய தினங்களில் காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணி வரை சேவல் சண்டை போட்டி நடத்த கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போட்டியில் களம் காண உள்ள சேவல்களுக்கு கடந்த 21 நாட்களாக காலை மாலை என தங்கானூர் பகுதியில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு வருகிறது. 

நடைபெற உள்ள போட்டிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் இலங்கை நாடுகளிலிருந்தும் சண்டை சேவல்கள் பங்கேற்க உள்ளன. போட்டியில் வெற்றி பெறும் சேவல்களுக்கு தங்க மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் சேவல்களுக்கு பரிசுகள் அளிக்க விழா கமிட்டி முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி