திருவள்ளூர்: அதானி துறைமுகத்தில் வெள்ளி கட்டிகள் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் உள்ள தனியார் கண்டைனர் முனையத்தில் லண்டனில் இருந்து இறக்குமதி செய்து அதானி துறைமுகத்தில் கண்டெய்னரில் வைக்கப்பட்டிருந்த எட்டு கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை. 

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி தனியார் துறைமுகத்தில் அமைந்த சி எஸ் எஃப் கண்டைனர் யார்டில் எட்டு கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான 922 கிலோ கிராம் எடையுள்ள 30 வெள்ளிப் பார்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இது குறித்து லண்டனில் இருந்து எச் எஸ் பி சி வங்கி மூலம் இரண்டு கண்டெய்னர்களில் முறையே 20 டன் மற்றும் 19 டன் என கண்டைனரில் சீல் வைக்கப்பட்ட நிலையில் 39 டன் எடையுள்ள 135 வெள்ளிப் பார்களை லண்டன் கேட்வே போர்ட் வழியாக சென்னை காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு கடந்த மாதம் 30-ம் தேதி வந்ததை சுங்கத்துறை சோதனைக்குப் பின்னர் இறக்குமதி செய்த நிறுவனம் வெளியே எடுக்க இருந்த நிலையில் கண்டெய்னரை திறந்து மர்மமான முறையில் கொள்ளையடித்து சென்றது குறித்து காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் வெள்ளிப் பார்களை இறக்குமதி செய்த தாசரி ஸ்ரீ ஹரி ராவ் 48 என்பவர் அளித்த புகாரின் பேரில் காட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி