கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் கடந்த 4-ம் தேதி ராஜ்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும், அவரது மனைவிக்கு அரசு வேலை, வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து 3-வது நாளாக உடலை வாங்காமல் ராஜ்குமாரின் தாயார் கல்யாணி, நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை வைத்தார்.