பரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மீது வெளியாட்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதால் தங்களது உயிருக்கு ஆபத்து என்று கூறி, பாதுகாப்பு வழங்கவும், தாக்கியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் திருவாலங்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களது கிராமத்திற்கு சுடுகாடு மற்றும் பாதை அமைக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: அன்புமணி அழைப்பு