இதனிடையே பேருந்தின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த இருவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் திருப்பதியிலிருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு, ஆம்புலன்சும் நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் போலீசார் பேருந்து மற்றும் லாரியை சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு திருத்தணியில் விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த விவகாரம் பேசுபொருளாக ஆன நிலையில் மீண்டும் அரசு பேருந்து ஒன்று விபத்துச் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதி வாசிகள் லாரி ஓட்டுனரை கீழே இறங்க சொல்லி வற்புறுத்தியதால் பயந்து போன லாரி ஓட்டுனர் லாரியை விட்டு இறங்காமல் லாரியிலேயே அமர்ந்திருந்தார். இதனால் திருவள்ளூரிலிருந்து சென்னை செல்லும் மார்க்கமான சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.