இதனால் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்த முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஜெகதீசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கடம்பத்தூர் காவல் நிலைய போலீசார் ஜெகதீசனை வெட்டிவிட்டு தப்பிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினரை வெட்டிய சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது