சாலையில் சென்ற சிலரை கடத்தல் காரர்கள் இடித்துத் தள்ளியுள்ளனர். முதியவர் ஒருவர் லேசான காயம் அடைந்துள்ளார். கடத்தல் காரர்களின் கார் திருநின்றவூர் அருகே குறுகலான சாலையில் காரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். பின்தொடர்ந்து வந்த வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் காரை பறிமுதல் செய்து அதிலிருந்த தந்தத்தை மீட்டுள்ளனர். தப்பியோடிய கடத்தல் காரர்களில் ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை கைது செய்து திருவள்ளூர் வனத்துறை அலுவலகத்திற்குக் கூட்டிச்சென்று யானை தந்தம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தந்தத்தின் மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு