இந்நிலையில் குட்டை புறம்போக்கு இடத்திற்குப் பட்டா உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்திடம் தவறுதலாகப் பட்டாவைக் கொடுத்து, அந்த இடத்தில் ஏர்டெல் டவர் அமைப்பதற்குப் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியுள்ளார். இதனால் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடையே ஏர்டெல் நிறுவனத்தினர் குட்டை புறம்போக்கு இடத்தில் டவர் அமைக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், இதனை உடனடியாகத் தடுக்க வேண்டும் எனவும் கிராமத்தில் உள்ள பெண்கள் ஆவடி மாநகர துணை ஆணையர் ரவிக்குமார் மற்றும் செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக குட்டை புறம்போக்கு இடத்தில் ஏர்டெல் நிறுவனம் தவறாக அமைக்கும் பணியினைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று தடை பெற்று வரும் வரை டவர் அமைக்கும் பணியினை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?