இதனை அடுத்து சென்னையில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், துணிக்கடையின் ஷட்டர்களை மூடிக்கொண்டு கடையில் வாங்கப்பட்ட துணிகளுக்கு முறையாக ஜிஎஸ்டி பில் உள்ளதா? எவ்வளவு ரூபாய்க்கு துணி வாங்கப்படுகிறது? எவ்வளவு ரூபாய்க்கு துணி விற்கப்படுகிறது என்பது குறித்து கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
தீபாவளி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து விழாக்காலம் இருப்பதால் பொது மக்கள் அதிகளவில் குவிந்து புத்தாடைகளை வாங்கிச் செல்லும் நிலையில், தரமான துணிகளை விற்பனை செய்கிறார்களா? அல்லது எக்ஸ்போர்ட் நிறுவனத்திலிருந்து விலை மலிவான துணிகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்களா? என்றும் கடைகளில் உள்ள கம்ப்யூட்டரில் வாங்கப்பட்டுள்ள மற்றும் விற்கப்பட்டுள்ள பில்லை சோதனை செய்து வருகின்றனர்.