அதேபோன்று கனரக வாகனங்கள் ₹210 இருந்து ₹220 உயர்ந்துள்ளது. அதிக பாரங்கள் கொண்டுவரும் வாகனங்களுக்கு ₹260 இருந்து ₹265 உயர்ந்திருப்பதால், ஏற்கனவே பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டு பொருட்களும் உயர்ந்திருக்கும் நிலையில் மேலும் சுங்க கட்டணம் உயர்த்திருப்பதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும். கட்டணத்தை குறைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பேருந்துகள் ஏற்கனவே வங்கியில் கடன் பெற்று இயக்கி வரும் நிலையில் சுங்க கட்டணம் உயர்வால் மிகச் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதால் ஒன்றிய அரசு கட்டணத்தை குறைக்க வேண்டும் என தனியார் பேருந்து வாகன உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?