இப்படிப் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் அரசு பேருந்துகளில் ஆபத்தான நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலைகளில் கால்களை தேய்த்தவாறு சுப்பிரமணிய சாமி அரசு கல்லூரிக்கு சென்று தொடர்ந்து கோஷம் போட்டு ஆபத்தான நிலையில் பேருந்தில் உள்ள பயணிகளுக்கும் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் செல்கின்றனர்.
தொடர்ந்து இப்படி செல்லும் இந்த மாணவர்கள் மீது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை என்று குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர். விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று அச்சத்துடன் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.