திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆற்காடுகுப்பம் பகுதியில் சென்றபோது சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி அதி வேகமாக சென்ற தமிழ்நாடு அரசு சுற்றுலா பேருந்து பைக் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார் இறந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அரிகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.