திருத்தணி: "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் குத்து விளக்கு ஏற்றிய எம்எல்ஏ

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரம் புதிய தோட்டக்காரர் திருமணமண்டபத்தில் நடந்த "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டு குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம் என 46 அரசு சேவைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்ததும் உடனடியாக பிறப்புச் சான்றிதழ், மின் இணைப்பு பெயர் மாற்றச் சான்றிதழ், உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து முகாமிற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். உடன் வருவாய்க் கோட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் வி. வினோத் குமார், திருத்தணி நகர செயலாளர் G. S. கணேசன், நகர துணை செயலாளர் T. S. ஷியாம் சுந்தர், நகர்மன்ற உறுப்பினர்கள் - ந. பொன்னுசாமி, K. S. அசோக் குமார், நகர் மன்ற உறுப்பினர் - மா. பிரபு, G. சித்திக் அலி மாவட்ட அமைப்பாளர் - சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி