திருத்தணி: ஆமை வேகத்தில் நடைபெறும் மழை நீர் வடிவு கால்வாய் பணிகள்

திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகையில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகள் வியாபாரம் பாதிக்கிறது. வீட்டிலிருந்து மருத்துவ தேவைகளுக்குச் செல்ல முடியவில்லை. விரைந்து பணிகளை முடிக்காவிட்டால் சாலை மறியல் மேற்கொள்வோம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்த வியாபாரிகள். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கே.ஜி. கண்டிகை என்ற ஊராட்சியில் பஜார் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலமாக நடைபெற்று வருகிறது. 

ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைந்து முடிக்காமல் ஆமை வேகத்தில் 20 நாட்களுக்கும் மேலாக பணிகளை முடிக்காமல் வைத்துள்ளனர். கால்வாய் பணிகளுக்காக பள்ளங்கள் 15 அடிகளுக்கும் மேல் தோண்டப்பட்டு கட்டுமான கம்பிகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசிக்கும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்ல முடியாமல் அவசர தேவைகளுக்கும் மருத்துவ தேவைகளுக்கும் வெளியில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி