திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வு காலப்பயன்கள் குறித்த ஓய்வூதியதாரர்களின் முறையீட்டு மனுக்களை வரும் ஜூன் 19ம் தேதி வரை மாவட்ட கலெக்டர் வரவேற்கிறார். அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணும் தடைகளுக்கு முடிவு காணப்படும். சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு இதுகுறித்து அறிவுரைகள் வழங்கப்படும்.