திருத்தணி கோயிலில் நடந்த 100க்கும் மேற்பட்ட திருமணங்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வைகாசி மாதத்தை முன்னிட்டு முதல் சுபமுகூர்த்த தினம் என்பதால் திருத்தணி மலைக்கோயில் அடிவாரத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் திருத்தணியில் அரக்கோணம் சாலை, ரயில் நிலையம் சாலை போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் என்பதால் இந்த திருக்கோயிலில் இன்று வைகாசி தினத்தின் 73 திருமணங்களும், மேலும் அனுமதியில்லாமல் மலைக்கோயில் வளாகத்தில் செயல்படும் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றதால் மலைக்கோவிலில் திருமணத்திற்கு வந்தவர்களும், மற்றும் மலைக்கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்தவர்களும் கடும் வாகன நெரிசலால் 2 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவித்தனர். போதிய போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இருந்தும் போலீசாரே திணறும் சூழ்நிலை வாகன நெரிசலால் ஏற்பட்டது. போதிய பார்க்கிங் வசதிகளும் மலைக்கோவிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி