திருவள்ளூர்: ஜெட் ஒர்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை துவக்கி வைத்த அமைச்சர்

திருவள்ளூர் மாவட்டம் கண்ணூர் கிராமத்தில் ஜெட்வொர்க் (ZETWERK) எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஏழாவது தொழிற்சாலையை மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்விനி வைஷ்ணவ், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

முன்னதாக பெண் தொழிலாளர்களால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், தமிழ் மொழி தமிழர்களின் கலாச்சாரம் உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று புகழாரம் சூட்டினார். கூடுதலாக மேலும் இரண்டு எலக்ட்ரானிக் தொழிற்சாலைகளை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் மற்றும் மணலூர் ஆகிய இரண்டு இடங்களில் 1112 கோடி மதிப்பில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி