இதனால் ஆட்டோவில் வந்த இன்று திருமணம் நடந்த மணமகள் மற்றும் மணமகன் ஆகியோர்கள் படுகாயம் அடைந்தனர். மொத்தம் நான்கு பேர் படுகாயம் அடைந்த இவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இவர்கள் அனைவரும் உயிர் தப்பி உள்ளனர்.
சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருக்கோயில் நிர்வாகத்தினர் மலைக்கோவிலில் இருந்து வரும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு மற்றும் வாகனங்கள் சோதனை போன்றவை ஏற்படுத்தாததால் இதுபோன்ற விபத்துக்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன என்பது முருகப் பக்தர்களின் ஆதங்க கருத்தாகும்.