திருவள்ளூர்: பழுது நீக்கும்போது மின் ஊழியர் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு பேரூராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் மின் ஊழியர் ஒருவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று மின்சாரம் தாக்கி தீ பற்றி உடல் கருகி மின் ஊழியர் தூக்கி வீசப்பட்டு கொடூரமான முறையில் இறந்து போனார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிப்பட்டு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது மேற்கண்ட இடத்தில் பழுது நீக்கும் பணியில் பள்ளிப்பட்டு கொளத்தூர் பகுதியில் செயல்படும் மின்சார அலுவலகத்தில் ஓயர் மேனாக பணிபுரிபவர் விநாயகம் வயது (44) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் டி.வி.கண்டிகை என்ற பகுதியில் வசித்து வருகிறார். இந்த இறந்து போன விநாயகம் அவரது தந்தை கிருஷ்ணன். அவரது வேலையில் விநாயகம் பணியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்தார். பணியில் இருந்த போது தற்போது இறந்துள்ளார். சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி