இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற இளம்பெண்ணிடம் அசாம் மாநில இளைஞர் இக்ரம் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டவுடன் அந்தப் பகுதியில் இருந்து கிராமம் மக்கள் ஒன்றுதிரண்டு அசாம் மாநில இளைஞரைப் பிடித்து கனகம்மா சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் திருத்தணி டிஎஸ்பி கந்தன் ஆய்வாளர் நரேஷ் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திலுள்ள புல் செடி புதர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். ரகசிய இடத்தில் இளம்பெண்ணிடமும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வடமாநில அசாம் மாநில இளைஞர்கள் தங்கியுள்ள மற்ற இடங்களிலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.