பின் அவர்கள் அங்கு சந்தேகப்படும் படி நின்றுகொண்டிருந்த ஆண், பெண் இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்களின் பெயர் பிராஞ்சிமாளி, மஞ்சு சீர்கா என்பதும் இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த சூட்கேஸ், ஷோல்டர் பேக்கை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் சுமார் 30 கிலோ கஞ்சா இருந்ததை தெரியவந்தது.
தொடர்ந்து அதை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.