அப்போது, அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகர் பகுதியில் நவீன் சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், நவீனை வழி மறித்து, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நவீனை பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நவீன், நேற்று ( டிசம்பர் 31) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்த அம்பத்தூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், ''கடந்த 2021-ம் ஆண்டு வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்த அலெக்ஸ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக நவீனை, 6 பேர் கும்பல் கொலை செய்தது'' தெரியவந்தது.