லாரிகள் மூலம் அதிக அளவு பாரம் ஏற்றி செல்வதால் சாலைகள் முழுவதும் சாம்பல் கழிவுகள் கொட்டுவதால் கொண்டக்கரை குருவிமேடு குடியிருப்புகளில் படர்ந்து பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாச கோளாறு மற்றும் குடிநீர் பருக முடியாமலும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக பலமுறை சாம்பல் கழிவுகள் எடுத்துச் செல்லும் லாரிகளை சிறைபிடித்து பல போராட்டங்கள் நடத்தியும் மாற்று வழியில் இயக்காமல் அதே வழியிலேயே போவதால் இன்று ஆத்திரமடைந்த கொண்டக்கரை பகுதி மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாம்பல் கழிவுகள் ஏற்றி செல்லும் லாரிகளை முறைப்படுத்தி மாற்று வழியில் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்