இதில் அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் தாமதமாக வரவே மதியம் வரை நிகழ்ச்சி தொடர்ந்ததால் இதில் காலை முதல் சாப்பிடாமல் செவிலியர் ஒருவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதனை கண்டு அவரது தோழி உடனடியாக குண்டு கட்டாக தூக்கிச் சென்று படுக்க வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்