இந்நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அரசியல் கட்சியினரின் நிகழ்ச்சிகள், திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, பேனர்கள் வைப்பது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதனால், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பேனர் வைப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.