இது ஒரு புறம் இருக்க வீடுகளில் மற்றும் தெருக்களில் செல்லமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள் பட்டாசு சத்தத்திற்கு பயந்து தெறித்து ஓடியது, மேலும் நிறுத்தி வைத்திருந்த கார்களுக்கு மத்தியில் பயந்து ஒளிந்து கொண்டன. இருப்பினும் பட்டாசின் அதிரடி வெடிச்ச சத்தத்தில் நாய்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் சாலைகளில் தெறித்து ஓடின. இது பார்ப்பதற்கு வேதனை தரும் நிகழ்வாக இருந்தது. இதேபோன்று சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளும் ஒன்று கூட இல்லாமல் ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தை நோக்கி ஓட்டம் எடுத்தன. அதிக அளவு பட்டாசுகள் சத்தத்துடன் வெடிப்பதை நாய்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இதனால் நாய்களுக்கு அதிக அளவு பைத்தியம் ஏற்பட்டு அச்சத்தில் வெறி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பட்டாசு சத்தத்தை கேட்டு பெருக்கலில் இருக்கும் நாய்கள் படாத பாடுபட்டதை பார்த்த பொழுது மனதிற்கு வேதனை தரும் விதத்தில் அமைந்திருந்தது.
5,000 ஆண்டுகள் கடந்தும் மம்மிகளின் உடலில் போகாத வாசனை